Sunday, 12 June 2011

ஜோர்தானில் தொடர்ச்சியான பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் இலங்கைப் பணிப்பெண்கள


ஜோர்தானிலுள்ள பிரபல ஆடைத் தொழிற்சாலையான கிளாசிக் பாஷனில் வேலைக்கெனச் சென்ற இலங்கைப் பெண்களில் பலரை அந்நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியமை தெரியவந்துள்ளது. உலகத் தொழிலாளர்கள் மற்றும் மனித உரிமைகளுக்கான அமைப்பு தொகுத்துள்ள ஒரு அறிக்கையிலேயே இவ்விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு பணியாற்றும் பல பெண்கள் தமக்கு நேர்ந்த இந்த பாலியல் ரீதியான மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த தொழிற்சாலைதான் முக்கிய ஆடையகங்களான வல்-மார்ட், ரார்கெற், மசிஸ், ஹேன்ஸ் ஆகியவற்றுக்கும் ஆடைகளை விநியோகம் செய்வது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தத் தொழிற்சாலையின் பொது முகாமையாளர் அனில் சந்தாவுக்கு எதிராக 300 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இவரைப் பணியிலிருந்து நீக்கவேண்டும் என்று கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் கிட்டத்தட்ட 2400 இலங்கை, இந்தியத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

தற்போது, இனிவரும் இளம் பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பொருட்டு, ஒரு சில பெண்கள் முன்வந்து அங்கு நடக்கும் பாலியல் கொடுமைகளைத் தெரியப்படுத்தியுள்ளனர். ஆனால் அறிக்கையில் இப்பெண்களின் அடையாளங்களைத் தெரியப்படுத்தக்கூடாது என்பதால் அவர்களின் பெயர்கள் மாற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன.

Sunday, 5 June 2011

இவன் ஒரு வரலாறு (பிரபாகரன்)

இவன் ஒரு வரலாறு (பிரபாகரன்)  |  Ivan oru varalaru (prabhakaran)  |             By  பூபதி


தலைவன் -ஒரு இனப் போராட்டத்தின் எழுச்சிமிகு
வரலாறு புத்தகமாக........... வாங்கி படியுங்க.

330,000 voters ‘missing’ in Jaffna, Ki'linochchi electoral list after 2009 war of genocide


In 2009, the number of registered voters in Jaffna electoral district that comprises of the administrative districts of Jaffna and Ki'linochchi was 816,005. This figure has dropped to 481,791 entries in the register of the electoral district of Jaffna. On Thursday, Assistant Commissioner of Elections (ACE) of Jaffna Electoral District S. Karunanithi confirmed that the SL Election Department has removed 331,214 names from the list. “Most of them have fled the country,” was the official explanation by the ACE. The untold story is that the figure also includes the victims of genocide in Vanni from the Ki'linochchi district. Meanwhile, the date for local elections for 16 Piratheasa Chapais (PS) and three Urban Councils is fixed by the department to take place on July 23, the day when Tamils remember the victims of state-sponsored anti-Tamil pogrom in 1983. 
 

இந்தியா தான் ஒரு வல்லரசு என பொய் சொல்கிறது: அருந்ததி ராய்.



வளர்ந்துவரும் வல்லரசாகவும், வணிகத்தில் உலகத்தில் 4ம் இடத்தில் இருப்பதாக இந்தியா கூறுவது ஒரு பொய் என பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியா அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள பல கிராமங்களுக்கும், மலையடிவாரங்களுக்கு தனது சொந்தப் படைகளை அனுப்ப முடியாத நிலை காணப்படுவதாகவும், வணிகம் மற்றும் தொழில் முதலீடுகளுக்காக காட்டையும், அங்கே குடியிருக்கும் ஆதி வாசிகளையும் அது அழித்துவருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தனது நாட்டுக்குள்ளேயே தனது மக்களைக் கொண்று குவிக்கும் ஒரு நாடு இந்தியா என அவர் கடுமையாகச் சாடியுள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது சொந்த நாட்டில் உள்ள பழங்குடி மக்களை அழித்து அவர்களின் நிலங்களைக் கொள்ளையடிக்கிறது இந்திய அரசு என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பல மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்குள் வாழ்வதாகவும், கிராமங்களைச் சென்று பார்வையிட்டாலே அது தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இந்தியா வளர்ச்சியடைந்துள்ளதா எனக் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், இந்தியா வளர்ச்சியடைந்ததாகக் கூறுவது ஒரு பொய் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது லண்டனுக்கு இவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் இந்தியா குறித்து தெரிவித்துவரும் கருத்துகள் மேற்குலக நாடுகளால் கருத்தில்கொள்ளப்படுவதோடு, இந்தியாவும் இதனை உற்றுக் கவனித்தவண்ணமே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் உள்ள ஆதிவாசிகளையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் பாதுகாப்பது மட்டுமல்லாது, இயற்கையையையும் பாதுகாக்கவேண்டும் என்று அருந்ததி ராய் அவர்கள் பாடுபடுவது மேற்குலகை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
அதே வேளை இந்திய அரசு அவர்மேல் கடும் ஆத்திரமடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும். பல நாடுகளுக்கு மன்மோகன் சிங் சென்று இந்தியா வல்லரசு ஆகிவிட்டதாகச் சொல்லிவர, சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படும் அருந்ததி ரோய் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த அது இந்திய அரசுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது.

Friday, 3 June 2011

செக்ஸ்: சுவாரசியமான 10 கண்டுபிடிப்புகள்!




“செக்ஸுன்னா, ஏன்யா இப்படி அலையுறீங்க”, அப்படீன்னு யாராவது கேட்டா, சுத்தமா யோசிக்காமகூட, “ஏன்னா, அதுல ஒருவிதமான சுகம், கிளர்ச்சி, இன்பம் இப்படி நெறைய இருக்குங்கிறதுனாலதான்”ன்னு எல்லாரும் கோரசா கத்திச் சொல்லனும்னாவது நெனைப்பாங்க அப்படீங்கிறதுதான் நிதர்சன உண்மை?! ஆனா, சொல்வாங்களா மாட்டாங்களாங்கிறது ஆளைப் பொறுத்தது!

ஆமா, ஏன் செக்ஸ் விவரங்கள், படங்கள், காணொளிகள், கிசுகிசுக்கள்னு இப்படி எதுவா இருந்தாலும் ‘தீ’ மாதிரி, அப்படியே பத்திக்கிட்டு எரியுது நம்ம (மனித) சமுதாயத்துல மட்டும்?! இதுக்கு ஒரு முக்கிய காரணம், செக்ஸ் பற்றிய செய்திகள (முண்டியடிச்சிக்கிட்டு) முதல் பக்கத்துலயோ, பிரத்தியேகமாகவோ பிரசுரிக்கிற நம்ம ஊடகங்கள்தான்னு சொல்லனும்!

“செக்ஸுங்கிறது ஒரு வகையான பசி! தினமும் மனிதனுக்கு ஏற்படுற உணவுப்பசி மாதிரி, ‘செக்ஸுங்கிறது’ ஒரு உடல் பசி” அப்படீன்னு நம்ம பத்திரிக்கை ஊடகத்துலதான், சில வருடங்களுக்கு முன்பு ஒரு மருத்துவர்/நடிகையோட பேட்டியில படிச்சதா நியாபகம்! உண்மைதான், செக்ஸ் ஒரு பசிதான். ஆனா, நம்ம சமுதாயத்துல அது வெறும் பசியா மட்டுமே பார்க்கப்பட்டிருந்தா, செக்ஸ் பத்தின ஒரு அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு மிக மிக குறைவுங்கிறது என்னோட புரிதல்!

“ஏய்….என்னப்பா இது இழுவ! சீக்கிரம் மேட்டருக்கு வாப்பா”ன்னு நீங்க சவுண்டு விடுறதுக்கு முன்னாடி நான் பதிவுச் செய்திக்கு வந்துடறேன். செக்ஸ் பத்தின ஒரு அதீத ஆர்வம் மக்களுக்கு இருக்க ஒரு முக்கிய காரணம், அதுல இருக்குற பல சுவாரசியங்கள், புதுசு புதுசா வெளிவருகிற/நமக்குத் தெரியாத பல செய்திகளே. அப்படிப்பட்ட 10 சுவாரசியமான, செக்ஸ் குறித்த ஆய்வுகளைப் பத்தித்தான் நீங்க இப்போ படிக்க போறீங்க…..
செக்ஸுக்கு வயதில்லை! (Sex Is Ageless, for Some)

பொதுவான நம்பிக்கைக்கு மாறாக, 75 முதல் 85 வயதானவர்கள், மாதத்துக்கு இரு முறை உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்கிறது 2007 ஆம் ஆண்டில் New England Journal of Medicine என்னும் மருத்துவ வார இதழில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை!  பொதுவான நம்பிக்கை என்னன்னு கேட்டீங்கன்னா, இளம் வயதினரே அதிகம் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பதே?!
செக்ஸ் ஆயுட்காலத்தில் ஆண்களுக்கே முதலிடம்! (Men Outlive Women Sexually)

பெண்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த ஆயுட்காலம்/வாழ்நாளை கொண்ட ஆண்கள், செக்ஸ் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் தலைகீழாக இருக்கிறார்கள்! அதாவது, 55 வயதில் உள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால், செக்ஸ் வாழ்க்கை/ஈடுபாடு ஆண்களுக்கு மேலும் 15 வருடங்களுக்கு இருக்கிறதாம்! ஆனால் பெண்களுக்கோ 10 வருடங்கள்தானாம்! (இது அமெரிக்கர்களில் நடத்தப்பட்ட ஆய்வு என்பதை நினைவில் கொள்க)
செக்ஸ் குற்றஉணர்வு பாலினத்தை பொறுத்தது! (Guilt Is Gender-Dependent)

செக்ஸ் தொடர்பான குற்ற உணர்வுகளைப் பொறுத்தவரை, ஆண்களின் குற்ற உணர்ச்சியானது தன் பெண் துணைக்கு செய்யும் செக்ஸ் துரோகத்தினாலும்/ஏமாற்றுதல், பெண்களின் குற்ற உணர்ச்சி ஒரு சமுதாய கட்டமைப்பின் செக்ஸ் குறித்த விதிகளை மீறுவதாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது! ஆனால், செக்ஸ் துரோகம் என்பது அடிப்படையில் இரு பாலினத்தவருக்கும் பொதுவானது என்கிறார் கனடா நாட்டு ஆய்வாளர் மேரியான் ஃபிஷ்ஷர்!
செக்ஸ் துணையை தேர்ந்தெடுப்பதில் பெண்கள் ஏன் பொறுத்திருக்கிறார்கள்! (Why Women Wait)

தனக்கு சரியான செக்ஸ் துணையை, தன் இயற்கை உணர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்வரை ஒரு பெண் பொறுத்திருக்கிறாள். ஆனால், ஒரு ஆண் பொறுத்திருப்பது தான் போட்டிக்கு/சவாலுக்குத் தயார் என்பதைக் காட்ட என்கிறது ஒரு ஆய்வு!
துன்பத்துக்கு அடிப்படையாகும் இன்பம்! (Pleasure Can Hurt)

தங்களின் 20, 30 வயதுகளில் செக்ஸில் மிகுந்த ஆர்வமும், அதிக சுய இன்பமும் காணும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது நாட்டிங்கேம் பல்கலைக்கழக ஆய்வு! ஆனால், அதே வாய்ப்பானது, வயதாக ஆக குறைகிறதாம். அதைவிட முக்கியமாக, ஒருவரின் 50 வயதிலும் அதற்க்கும் பின்னுமான செக்ஸ் செயல்பாடுகள் சிறிதளவேனும், அது ப்ராஸ்டேட் சுரப்பி புற்று நோயிலிருந்து ஒரு மனிதனை காக்கிறதாம்!
செக்ஸும் மகிழ்ச்சியும் இரண்டறக் கலந்தைவை! (Sex and Happiness Go Together)

செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்களாம். செக்ஸில் அதிகமாக ஈடுபடுபவதால் சந்தோஷமாக இருக்கிறார்களா, சந்தோஷமாக இருப்பதால் அதிகம் செக்ஸில் ஈடுபடுகிறார்களா என்பது தெரியவில்லை என்கிறார் ஆஸ்திரேலிய நாட்டு, மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர் சூசான் டேவிஸ்! அதுமட்டுமில்லாமல், ஒரு பெண்ணின் திருப்தியில்லாத செக்ஸ் வாழ்க்கை, அப்பெண்ணின் பொதுவாழ்க்கை உறவுகளையும், தன்னம்பிக்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்கிறார் டேவிஸ்!
ஆண்குறி நீளப்படுத்தும் சிகிச்சைகள் பலன் தரலாம்! (Penis Extenders Might Work)

செக்ஸ் மர்மங்கள்ல ஒன்றான ஆண்குறியின் நீளத்தை அதிகரிக்க சிகிச்சைகள் பற்றிய செய்திகள் சமுதாயத்தில் ஏராளம். அதுபோன்ற சிகிச்சைகள் சில பலன் தரலாம் என்கிறது ட்யூரின் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து, ஆண்குறியை ஒரு இன்ச் நீளம்வரை அதிகப்படுத்தியுள்ளது என்கிறார்கள்! அது எந்த நிறுவனம்னு கேக்காதீங்கோவ்…..ஏன்னா அவங்க அதை சொல்லல?!

இல்லாத ஒரு செக்ஸ் உச்சகட்ட புள்ளி?! (The G-Spot May Not Exist)

இதுவரைக்கும் பல பேர அல்லோ கல்லோலப் பட வைக்கிற உலக மகா கேள்விகள்ல ஒன்னு, “ஜி-ஸ்பாட் அல்லது செக்ஸின் உச்சகட்ட இன்பப் புள்ளி அப்ப்டீன்னு ஒன்னு இருக்கா இல்லியா?” அப்படீங்கிறது! ஆனா, அந்த புள்ளி ஒரு கற்பனையான ஒன்னு, அப்படியே இருந்தாலும் அது தனிமனித சம்பந்தப்பட்டது அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்!
செக்ஸ் வாசனைகள்! (Sex Smells)

செக்ஸ் உணர்வால் தூண்டப்பட்ட ஒரு ஆணின் வியர்வையானது வித்தியாசமான வாசனை/ நாற்றத்தைக் கொண்டதாம்! சாதாரண வியர்வைக்கும், செக்ஸ் வியர்வைக்குமான வித்தியாசத்தை ஒரு பெண்ணால இனம் காண முடியும் என்கிறது The Journal of Neuroscience என்னும் மருத்துவ மாத இதழின் வெளியான ஒரு ஆய்வறிக்கை!
செக்ஸை தூண்டும் ஆன்மீகம்?! (Spirituality is Sexy)

ஆன்மீகமானது, இளம்வயதினரின் செக்ஸ் வாழ்க்கையை மதம், தூண்டுதல் மற்றும் மதுவை விட பெரிதும் பாதிக்கிறது என்கிறது ஆய்வு! ஆன்மீகத்தின்பால் ஆர்வமுடைமையானது இருவருக்கிடையில் உள்ள நெருக்கத்தை அதிகரித்து ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு அடிப்படையாகிறது என்கிறது ஆய்வு!

Wednesday, 11 May 2011

அமெரிக்க தாக்குதலுக்கு முன்பே பின்லேடன் இறந்து விட்டார்: ஈரான் புதிய தகவல்


உலகையே அச்சுறுத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் கடந்த 2-ந்தேதி அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு அவரது உடலை கடலில் அடக்கம் செய்ததாக அமெரிக்கா அறிவித்தது. இதை ஈரான் அரசு மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் உளவுத் துறை மந்திரி ஹைதர் மோஸ்லேகி ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அல்கொய்தா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொல்லவில்லை. உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பே இறந்து விட்டார். அதற்கான நம்பகத்தகுந்த மிக சரியான தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது. உண்மையிலேயே அவரை அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை கைது செய்திருந்தாலோ அல்லது கொன்று இருந்தாலோ அவரது உடலை ஏன் காட்ட வில்லை.

உடலை கடலில் ஏன் வீச வேண்டும். எனவே இந்த செய்தி அப்பட்டமான பொய்யாகும். அமெரிக்காவில் நிலவும் உள்நாட்டு பிரச்சினையை திசை திருப்ப குறிப்பாக அங்கு நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்து மக்கள் எண்ணத்தை மாற்ற வெள்ளை மாளிகை அதிகாரிகள் பின்லேடன் கொல்லப்பட்டதாக பொய் செய்தியை பரப்பியுள்ளனர்.இவ்வாறு மந்திரி ஹைதர் மோஸ்லேகி தெரிவித்துள்ளார்.

Tuesday, 10 May 2011

ஒசாமாவை சுட்டுக் கொன்றது எப்படி? அமெரிக்கா தகவல்

 ஒசாமா பின்லேடனின் வசிப்பிடம் GeoEye இனால் வழங்கப்பட்ட செய்மதிப் புகைப்படம். பாகிஸ்தான் அபோத்தாபாத் மத்தியிலுள்ள ஒசாமா பின்லேடனின் வசிப்பிடத்தைக் காட்டுகிறது.


‘பயங்கரவாதம்’ – அமெரிக்கா விரிக்கும் அகில வலை
பயங்கரவாதம் (அல் இர்ஹாப்) என்ற பண்புப்பெயர்சொல்லானது மொழியியல் ரிதியில் ஆராயும்போது அது பயமுறுத்துதல் (அர்ஹபா) என்ற வினைச்சொல்லிலிருந்தே தோன்றுகின்றது. எனினும் 1979-ம் ஆண்டு அமெரிக்காவினதும், இங்கிலாந்தினதும் உளவுத்துறையினர் மாநாடொன்றினை நடத்தி “அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக சமூகத்தின் பொது விருப்பத்திற்கு எதிராக வன்முறையை பிரயோகித்தல்” என்பதே பயங்கரவாதம் என்று அதன் அர்த்தத்தை அரசியல் ரிதியில் மாற்றின. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பல கருத்தரங்குகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், சட்டங்கள் இயற்றப்பட்டும் எந்த இயக்கங்கள், சங்கங்கள், கழகங்ககள், நாடுகள் (அவர்களின் வரைவிலக்கணப்படி) பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன என்பன போன்ற பல தகவல்கள் வெளியிடப்பட்டன. இந்த சட்டங்களும், பாகுபாடுகளும், எந்நாடுகள் இவற்றை இயற்றினவோ, அந்நாடுளின் அரசியல் சுயலாபத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி கொல்லப்பட்டதை “பயங்கரவாதம்”; என அமெரிக்கா கொள்கிறது. மன்னர் ஃபைசல் கொல்லப்பட்டதையும், ஜோன் கென்னடி கொல்லப்பட்டதையும் அது பயங்கரவாதம் என ஏற்றுக்கொள்ளவில்லை. FBI எனப்படும் அமெரிக்காவின் புலனாய்வுத்துறையின் கட்டிடம் தகர்க்கப்பட்ட பொழுது, அச்செயல் பயங்கரவாதத்தின் சதி வேலை என்று கூறிய அமெரிக்கா தன் நாட்டின் ஒரு குழுவே அதை செய்தது என்று தெரிந்த பின், அச்செயலை பயங்கரவாதம்; என சொல்வதை விடுத்து, சாதாரணக் குற்றம் என்ற அடிப்படையில் அப்பிரச்சனையை அணுகியது.

இவ்வாறு 1970ற்குப்பின் பயங்கரவாதத்திற்கு தன் விருப்பப்படி பொருள் புணைந்து அதை உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பிரகடனப்படுத்திற்று அமெரிக்கா. 1980இல் பெய்ரூட்டில் TWA என்னும் அமெரிக்க விமானம் கடத்தப்பட்டதையும், அமெரிக்காவிற்கு சொந்தமான அல் கூபார் படைத்தளம் சவூதி அரேபியாவில் தகர்க்கப்பட்டதையும் அது காரணம் காட்டி 1996 ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) நாடுகளின் கூட்டமைப்பில், பயங்கரவாதத்தை எதிர்க்கும் 40 கோரிக்கைகளை கொண்டு வந்தது. நியுயோர்க்கிலுள்ள உலக வர்த்தக மையம் தகர்;க்கப்பட்டதையும் காரணம் காட்டி அமெரிக்கா, பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை இயற்றியது. இதற்கு 1997- ம் ஆண்டு அமெரிக்க மேல் சபை ஒப்புதலும் வழங்கிற்று. இதன் விளைவாக பயங்கரவாதத்தின் பெயரில் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் அந்நாடு கண்டித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தில் வாதிட்டு வெற்றி பெற இயலாதபடி அவரை கைது செய்யவோ, நாடு கடத்தவோ, அந்த நபருக்கு குடியுரிமை மறுக்கப்படுவது அல்லது அதிகபட்ச தண்டனை வழங்குவது போன்ற அனைத்தையும் செய்யத் துணிந்தது அமெரிக்கா.

அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளான வடகொரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இஸ்லாமிக் ஜிஹாத், ஹமாஸ், எகிப்தில் இயங்கி வரும் ஜமாஹ் இஸ்லாமிய்யாஹ், லிபியாவின் FIS போன்ற இயக்கங்களுக்கும், தமது பூர்வீக பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டத்தையும் அமெரிக்கா பயங்கரவாதச் சாயம் பூசி தண்டிக்க முனைகிறது.

தான் இயற்றிய சட்டங்களைக் கூறி எந்த ஒரு நாட்டின் (ஈராக், லிபியா) மீதும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் வெளி உறவுச் செயலாளர் ஜோர்ஜ் சல்ட்ஷ் பின்வருமாறு ஒரு முறை கூறியிருந்தார். “தீவிரவாதிகள் முயன்று தப்பி செல்ல முடியுமேயன்றி, அவர்கள் ஒளியவோ, மறையவோ முடியாது”. இவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை வகுத்து முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறது அமெரிக்கா.

கம்யூனிச உலகின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் பிரதான எதிரியாக இஸ்லாம் விளங்குவதாக அமெரிக்கா கருதுகிறது. இஸ்லாமிய உலகில் மீண்டும் இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பல இயக்கங்களும், முஸ்லிம் சமூகமும் செயற்படுகின்ற வேளையில் அவர்களை உடனடியாக அடக்கி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. எனவே இஸ்லாமிய சிந்தனையை அடிப்படையாகக்கொண்ட ஒரு து}ய இஸ்லாமிய உலகு (கிலாபா ராஷிதா) தோற்றம் பெறுவது குறித்து அமெரிக்கா பயப்படுகிறது. இதன் விளைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான தனது வியூகங்களை செயற்படுத்தும் முக்கிய பிராந்தியமாக முஸ்லிம் மற்றும் அரபுலகை அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இதன் விளைவாக முஸ்லிம் உலகெங்கும் போராட்டங்களையும், வன்முறைகளையும் து}ண்டி நிலையற்ற அரசியல் பொருளாதார நிலையை தோற்றுவிப்பதில் அமெரிக்கா பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி பல இஸ்லாமிய இயக்கங்களை அமெரிக்கா “பயங்கரவாத இயக்கங்கள்” எனக் கூறி இஸ்லாமிய ஆட்சி நோக்கி அழைக்கும் எந்த ஒரு அமைப்பையும் அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதன் மூலமாக அவற்றுக்கு எதிராக அதியுச்ச தடைகளை ஏற்படுத்த முனைந்துள்ளது. இதற்காக அமெரிக்கா ஏனைய நாடுகளையும், வற்புறுத்தியும், அவற்றை ஒன்று திரட்டியும் இந்த இயக்கங்களை ஒடுக்க முற்படுகிறது. இதில் பலிகடாவாக ஆக்கப்படுவது கிலாபா ஆட்சியைக் கொண்டு வர முயலும் முஸ்லீம்களே ஆவர்.

எது எவ்வாறெனினும் முஸ்லீம்கள் முற்றுமுழுதாக இஸ்லாமியர்களாக வாழ வேண்டும் என்பது அவர்கள் மீது அல்லாஹ்வால் சுமத்தப்பட்ட மார்க்கக்கடமையாகும். எனவே இது முழுமையாக சாத்தியப்படுவதற்கு கிலாஃபா ஆட்சி முறையைக் கொண்டு முஸ்லிம்கள் ஆழப்பட வேண்டியது அவசியமாகும். இதையே ஷரியா வலியுறுத்துகிறது.

எனவே இஸ்லாத்திற்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும், முஸ்லிம்களின் எழுச்சியையும் அமெரிக்கா பயங்கரவாதம் என்ற சாயம் பூசி தண்டிக்க நினைத்தால் நீதி செலுத்துவதற்காக அனுப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அதற்கெதிராக அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி போராட வேண்டியது முஸ்லிம் உம்மத்தின் தார்மீகக் கடமையாகும்.