ProXcan is a direct supplier of ten different ribbon manufacturers with supply facilities all over the North America. The real numbers are 7 in United States and 3 in Canada. Each of these manufacturers has production strengths and capabilities that allow them to produce quality products at competitive pricing. ProXcan products sells only premium ribbons at the lowest prices possible. We also encourage you to check out Proxcan with any reputable business agencies. They'll tell you that ProXcan has had a quality record since it opened. We built ProXcan on a foundation of a few basic commitments: Hard work, personalized service, quality products, and low overhead cost. visit now www.proxcan.com
தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Wednesday, 21 September 2011
Monday, 5 September 2011
இந்தியாவிற்கு தப்பிச் சென்ற புலி உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்கும் புலனாய்வு பிரிவு?
இறுதிக் கட்ட போரின் போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு, அந்த அமைப்பின் புலனாய்வுப் பிரிவு மதாந்த சம்பளம் வழங்கி வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

உறுப்பினர் ஒருவருக்கு தலா மூவாயிரம் ரூபா என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் மறைந்து வாழும் சுமார் ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஊதியம் வழங்கப்படுவதாக அரச புலானய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பாவில் வாழ்ந்து வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர் ஒருவரினால், தென் இந்திய புலித் தலைவர் ஒருவருக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகளில் குறித்த உறுப்பினர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னதாக சென்னை மஹாபோதி அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய நபர்கள், ஊதியம் பெற்றுக்கொள்ளும் புலி உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலி உறுப்பினர்களை தொடர்ந்தும் அமைப்பில் வைத்திருக்கும் நோக்கில் இவ்வாறு மாதாந்த ஊதியம் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தேடல் பொறியை உபயோகித்துள்ளீர்களா?
இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள் ஆகும்.
இதனை விடவும் ஒரு விடயத்தினை ஆழமாகத்தேட ஒரு தளம் உள்ளது.
அத்தளம் www.soovle.com
இந்தத்தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது.
இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword கொடுக்கப்பட்டிருக்கும் இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.
Saturday, 27 August 2011
அமெரிக்காவும் ஈழத்தமிழர் விவகாரமும்! - ஹிலாரி கிளிண்டனும் ஜெயராம் ஜெயலலிதாவும் அப்படி என்னதான் பேசித் தொலைத்தார்கள்?
போதாக்குறைக்கு ஹிலாரி கிளிண்டனும் ஜெயராம் ஜெயலலிதாவும் நீண்ட நேரம் பேசிய செய்தியும் வெளிவந்தாயிற்று. இப்போது எல்லோரது மனங்களிலும் தொக்கி நிற்கின்ற கேள்வி அப்படி என்ன தான் பேசித் தொலைத்தார்கள் என்பது.
அவர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பது “விலாவாரியாகத்” தெரியாவிட்டாலும் இது ஹிலாரியின் திட்டமிட்ட சென்னை விஜயம் என்பதையும் “ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு” என்பதும் இலங்கையுடன் விரும்பியோ விரும்பாமலோ நல்லுறவைப் பேண வேண்டும் என்பதையுமே தமிழக மக்களிற்குப் புரிய வைக்க வேண்டும் என்பதுமே ஜெயலலிதாவிற்கு சொல்லப்பட்ட செய்தியின் சராம்சமாகும்.
ஈழக்கோரிக்கையினை ஆத்மார்த்தமாக ஏற்று அதற்காகவே தன்னை அர்ப்பணித்த வை.கோ.வை இறுதிநேரத்தில் தனது கூட்டணியிலிருந்து கழற்றிவிட்ட ஜெயலலிதாவிற்கு, அல்லது தனது வெற்றிக்கு மறைமுகமாக உழைத்த சீமானை ஒரு மரியாதை நிமிர்த்தமாவது சந்திக்காத ஜெயலலிதாவிற்கு சொல்லப்பட்ட செய்தி புதியதல்ல.
இருந்தாலும் தமிழ்நாட்டை அமெரிக்கா அணுகுவது புதியதொரு நடைமுறை. இவ்வாறு மிகவும் நுட்பமாக இந்த விவகாரதத்தில் காய் நகர்த்துவதற்கு பின்பலமாக உள்ளவர் ஈழப்பிரச்சினையை அக்குவேறு ஆணி வேறாக அறிந்துள்ள ரொபேர்ட் ஓ பிளேக் என்ற அமெரிக்காவின் தென்னாசியாவிற்கான துணை இராஜாங்கச் செயலர் ஆவர்.
ரொபேர்ட் ஓ பிளேக் அமெரிக்க வெளியுறவுச் சேவையில் சேர்ந்த போது அவர் பணியாற்றிய இடம் அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதுவராலயம். அந்தக் காலப்பகுதியில் தமிழை புலமையாக அறிந்தது மாத்திரமல்லாமல் தமிழைப் பேசுகிற அளவிற்கு அவரது ஆர்வம் இருந்ததாக ஒரு தகவல். பின்பு இவரே இலங்கை மற்றும் மாலைதீவிற்கான தூதுவராக வந்து நோர்வேயின் பேச்சு முயற்சிகளின் போது அப்போது சிறீலங்காவிற்கான தூதுவராக இருந்தவர்.
2007ம் ஆண்டு பெப்ரவரி 27ம் திகதி மட்டக்களப்பிற்கு இராஜதந்திரிகள் குழுவுடன் விஜயம் செய்திருந்த போது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்ட செல் தாக்குதலில் இரண்டு தூதுவர்கள் உள்ளிட்ட 10 பேர் காயப்பட்டார்கள். இவருக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாக அப்போது சிறீலங்கா ஊடகங்களால் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னாளில் முள்ளிவாய்க்கால் வரையான நாட்கள் வரை ஈழத்தமிழரின் விவகாரத்தில் பெயரடிபட்ட ஒருவர். இப்போது பதவியுயர்வு பெற்று துணை இராஜாங்கச் செயலர். இருந்தபோதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பிரதேசம் தென்னாசியாப் பிராந்தியம். அதனுள் சிறீலங்காவும் உள்ளடக்கம். எனவே இப்போதைய இனப் பிரச்சினைத் தீர்வு முயற்சிகளின் கதாநாயகன் இவரேயாவர்.
இவர் 2009ல் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அரச தரப்பு உருத்திரகுமாரன் தலைமையிலானவர்களுடன் பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததோடு அதனைக் கொழும்புக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.
இருந்தபோதும் கனடாவிற்கு கப்பல்மூலம் அகதிகள் வருகை தந்தது அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றி இலங்கையில் மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளுடன் பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குள் இட்டுச் சென்றது.
அதற்கான காரணம் அக் கப்பல் பயணத்தின் பின்னணியில் விடுதலைப்புலிகளே இருந்தார்கள் என்ற உளவுத்துறைத் தகவல்கள் மற்றும் அக் கப்பல் விடுதலைப்புலிகளுடையதே என்ற ஆதாரபூர்வத் தகவல்கள் என்பனவாகும்.
இதுவே புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேசவேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா தவிர்த்து ஈழத்தமிழர்களின் ஜனநாயகத் தலைமையை ஈழத்திலேயே தேடுவதற்கு வழிவகுத்தது.
இவ்வாறு ஈழத்தமிழர்களின் ஜனநாயகத் தலைமை புடம்போடப்பட்டு, சிறீலங்கா அமெரிக்காவின் இராஜதந்திர மிரட்டல்களிற்கு உள்ளாக்கப்பட்டு வந்தவேளையிலே தமிழ்நாட்டில் சிறீலங்காவில் பிரிவினை தான் தீர்வு என்ற கோதாவில் அல்லது தமிழீழத்திற்கு ஆதரவான நிலைப்பாடு வலுவடைந்து வந்தது. இது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவாது என்பதையும் தமிழகம் ஈழப்பிரச்சினைத் தீர்விற்கு எப்படி உதவலாம் என்பதையும் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறீலங்காவிற்கான நிதியுதவிகளில் கால தாமதம் அல்லது குறிப்பிட்ட காலத்திற்குத் தடை என்ற ஒரு பொருளாதார நிலைப்பாட்டிற்குள் சென்றுள்ள அமெரிக்கா இந்த உள்ளுராட்சித் தேர்தலின் பின்னரான காலத்தில் ஒரு தீர்வுக்கு இலங்கையை செல்ல வைக்கப் போகிறது. அதற்கான மிரட்டல் ஆயுதமாக யுத்தக் குற்றவிசாரணையுள்ளிட்ட இதர தடைகள் இருக்கப் போகின்றன.
இதுவே இன்றைய தேதியில் ஈழத்தமிழர் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்த பார்வையாகும். அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு தற்காலிகமானதே! ஏனென்றால் அது எவ்வளவு காலத்திற்கு யதார்த்தமாயிருக்கும் என்பது அதன் அடுத்த முக்கிய தேவை உலகப் பந்தின் எந்தப் பிராந்தியத்தை நோக்கிச் செல்கிறது என்பதைப் பொறுத்தது மட்டுமல்ல, றொபேர்ட் பிளேக்கிற்குப் பதிலான வேறு ஒருவர் நியமிக்கப்பட்டாலும் மாற்றம் பெறும்.
Here is video link copy this url and paste it.
http://www.youtube.com/watch?v=NUD02Duv_II&feature=player_detailpageராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தூக்கு தண்டனையை அடுத்தமாத முதல்வாரத்திற்குள் நிறைவேற்ற உத்தரவு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தேர்தல் பிரசாரத்துக்கு வந்தார். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
ராஜீவ் காந்தியை கொலை செய்த விடுதலைப்புலிகள் மற்றும் உதவி செய்தவர்கள் என பலர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்யப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு 1992-ம் ஆண்டு பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் 26 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து 1998-ல் பூந்தமல்லி சிறப்புக்கோர்ட்டு தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து 26 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். 1999-ம் ஆண்டு மே மாதம் அந்த அப்பீல் மனுக்கள் மீது தீர்ப்பளிக்கப்பட்டது. முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற 22 பேரின் தண்டனை குறைக்கப்பட்டது. அதில் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆயுள் தண்டனை கைதிகளாக வேலூர் ஜெயிலில் உள்ளனர்.
இதற்கிடையே தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி தனக்கு மகள் இருப்பதால் கருணை காட்ட வேண்டும் என்று மனு அனுப்பினார். முருகன்- நளினி தம்பதிக்கு ஆருத்ரா என்ற மகள் இருக்கிறார். தற்போது அவர் முருகன் உறவினர்கள் அரவணைப்பில் இங்கிலாந்தில் படித்து வருகிறார். தன் மகளுக்காக தனது உயிருக்கு விலக்கு அளிக்க அவர் கோரிக்கை விடுத்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், நளினிக்கு தண்டனையை குறைக்கலாம் என்று கடிதம் கொடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2000-ம் ஆண்டு நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து அறிவித்தது.
இந்த நிலையில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரையும் தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பினார்கள். அந்த கருணை மனுக்கள் ஜனாதிபதி மாளிகை அலுவலகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தன.
தற்போது அந்த கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்து விட்டார். கருணை மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். போராட்டங்களும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த தமிழக தலைமை செயலாளருக்கு ஆணை ஒன்று வந்துள்ளது. அதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டணையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆணை தமிழக சிறைதுறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு அறிவுடை நம்பிக்கு தூக்கு தண்டணையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு நகல் அனுப்பி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலக உத்தரவு நகல் வந்த 7 நாட்களுக்குள் வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டணை நிறைவேற்றப்படும் என்று சிறைதுறை ஏடி.ஜி.பி. டோக்ரா கூறியுள்ளார். அதன்படி இன்று முதல் 7 நாட்களுக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஜெயிலில் ஏற்பாடுகள் நடக்கிறது.
Sunday, 21 August 2011
மனித மூளையை ஒத்த ‘சிப்’பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை
அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி ‘சிப்’ இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இச் ‘சிப்’ ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன.
சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே இதன் தயாரிப்புக்கான முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவிக்கின்றது. செயற்கை நுண்ணறிவின் ( artificial intelligence ) அடிப்படையாக இதன் உருவாக்கமானது திகழுமென ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனை உருவாக்கும் திட்டமானது 100 ஆராய்ச்சியாளர்களின் பங்குபற்றுதலுடன் சுமார் 6 வருடங்களாக நடைபெற்றுள்ளது.
இதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதியுதவியளித்துள்ளது. ஐ.பி. எம் அமைப்பும் இதற்கு நிதியுதவியளித்துள்ளது.
Sunday, 7 August 2011
Subscribe to:
Posts (Atom)
