
இதன் தொடர்ச்சியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தற்போது அவர் லண்டனில் பிணையில் உள்ளார்.
இந்நிலையில் விக்கிலீக்சுக்கான நிதி திரட்டும் வழிகளை, அமெரிக்கா அடைத்து விட்டது. விசா, மாஸ்டர் கார்ட், வெஸ்டர்ன் யூனியன் மற்றும் பே பேல் போன்ற நிதி நிறுவனங்கள் விக்கிலீக்சுக்கான நிதி திரட்டும் வேலையை நிறுத்தி விட்டன. இதுகுறித்து, நேற்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இனிமேல் ஆவணங்கள் வெளியிடுவது நிறுத்தப்படும். நிதி திரட்டும் பணி முழு வீச்சில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.